வணிக செய்திகள்

உரிய நேரத்தில் செயற்பட்டு வருவாயை அதிகரித்துள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் மீண்டுமொருமுறை உலகின் உரிய நேரத்தில் சேவைகள் வழங்கும் நிறுவனம் என்ற நற்பெயரை வென்றுள்ளது.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவன விமான சேவைகள் 2019 மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் 90 .75 வீதமான சேவைகளை உரிய நேரத்துக்குள் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வரும் செப்டெம்பர் மாதம் 91.37% நேரம் தவறாது நேர்த்தியாக செயற்பட்டமைக்காக உலக விமான சேவைகள் நிறுவனங்களில் முதலிடத்தை பெற்ற நிலையில் மீண்டும் இந்த வெற்றியை அடைந்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் முதல் இவ்வருடம் மே மாதம் வரையிலான 12 மாத காலப்பகுதியில் பயண ஆரம்ப நேரம் சராசரியாக 86 % ஆகவும் வந்தடைந்த நேரம் சராசரியாக 85 % ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது.  இது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.

இதன் மூலம் தாமதத்துக்கான வீண் செலவுகள் குறைக்கப்படுவதோடு விமான சேவைகளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதன் மூலம் விமான சேவைகளின் வருமானம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க