உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

இலங்கை வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற இலங்கை வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது

இதனுடைய இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  குறித்த மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட இலங்கை வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை (ஸ்மார்ட் ஸ்ரீலங்கா) சற்று முன்னர் திறந்து வைத்தார்

கருத்து தெரிவிக்க