உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

நான் ஸஹரானை கண்டதே இல்லை! அடித்துக் கூறும் ரிஷாட் – Update

உயிர்த்த ஞாயிறு தினத்தில் பல்வேறு இடங்களுக்கு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட தீவிரவாதக் குழுவை வழிநடத்திய முஹம்மட் ஸஹரானுடன் தமக்கு எந்த கொடுக்கல் வாங்கல்களோ, தொடர்புகளோ இல்லையெனவும், தாம் ஒருபொதும் அவரைக் கண்டதே இல்லையெனவும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
சதொச வாகனங்களை குண்டுதாரிகள் பயன்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, மற்றும் எஸ்.பி. திஸாநாயக்க ஆகியோரினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க