உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

வாகன விபத்தால் கெக்கிராவையில் பதற்றம் – பொலிஸார் குவிப்பு

கெக்கிராவை திப்பட்டுவௌவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியாகினர். விபத்திற்கு காரணமான வாகன சாரதி வாகனத்தை நிறுத்தாது சென்றுள்ளதாகவும் அதனால் ஆத்திரமடைந்த மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக கெக்கிராவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து குறித்த பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதோடு, வீதி நடுவில் டயர்களையும் எறித்து தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க