வடக்கு செய்திகள்

துணுக்காய் பிரதேசத்தில் சிறுவர் பூங்கா திறந்து வைப்பு

 

நாட்டிற்காக ஒன்றிணைவோம்” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் துணுக்காய் பிரதேச நியூ லக்கிஸ்ரார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது.

துணுக்காய்ப் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி திரு. சுகந்தன் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐனதிபதி செயலக உத்தியோகத்தர் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவிப்பணிப்பாளர் திருமதி சரோஜா மற்றும் துணுக்காய் பிரதேச செயலாளர்,கு.பிரபாகரமூர்த்தி. முன்னாள் வடமாகண பிரதி அவைத்தலைவர் வ.கமலேஸ்வரன், துணுக்காய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள், விளையாட்டு துறை உத்தியோகத்தர். கழக வீரர்கள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

.

கருத்து தெரிவிக்க