உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

கோயிலுக்கு சென்ற வாய்பேச முடியாத இளைஞர் பேசும் திறனுடன் திரும்பினார்

வாய்பேச முடியாத இளைஞர் ஒருவர் கோயிலுக்கு சென்று  பேசும் திறனோடு வீட்டுக்கு வந்த சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

ஹட்டன் களனிவத்தை பகுதியில் ஆகாஸ் எனும் இளைஞனுக்கே இவ்வாறானதொரு அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கடந்த மூன்று மாத காலமாக இந்த இளைஞனுக்கு வாய்ப்பேச முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் குறித்த இளைஞன் ஸ்ரீ குறிஞ்சு மாரியம்மன் ஆலயத்திற்கு சென்ற வேளையில் கடவுளிடம் தன் குறையை கூறி அழுதுள்ளார்

இதன்போது அவ்விடத்திற்கு வந்த ஆலய குருக்கள் ஏன் அழுகிறாய்? என கேள்வியெழுப்ப  குறித்த இளைஞன் திடீரென வாய்த்திறந்து தமது பிரச்சனையைக் கூறியுள்ளார்.

இது தமக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறித்த இளைஞர் கூறியுள்ளார்.

கருத்து தெரிவிக்க