உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

புலனாய்வு தகவல்கள் வெளியிடப்படுவதைஅனுமதிக்க முடியாது-ஜனாதிபதி

புலனாய்வு அதிகாரிகள் நாடாளுமன்ற தெரிவு குழுவுக்கு முன்னால் புலானாய்வு தகவல்களை வெளிப்படுத்துவதை அனுமதிக்க முடியாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை முன் கூட்டியே தடுக்காமை தொடர்பாக நாடாளுமன்ற தெரிவு குழு, சாட்சியங்களை பதிவு செய்து வருகிறது.

இந்த குழுவின் முன்னால், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமஸ்ரீ பெர்னாண்டோ, காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத தடுப்பு பிரிவின் அதிகாரி நாலக டி சில்வா போன்றோர் சாட்சியம் அளித்துள்ளனர் .

இதன் போது அவர்கள் சர்ச்சைக்குரிய பல விடயங்களை வெளிப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே இன்று ஜனாதிபதியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கருத்து தெரிவிக்க