வடக்கு செய்திகள்

வவுனியாவில் மாநாட்டு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது

வவுனியாவில் 20 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு கூடம் மற்றும் மாநாட்டு மண்டபம் என்பன கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பீ.வீரசேகரவினால் இன்று திறந்து திறந்து வைக்கப்பட்டன

வவுனியா புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள நிர்மாணத் தரக்கட்டுப்பாட்டு ஆய்வு கூடம் மற்றும் கோயில்குளம் கமநல சேவை நிலையத்தில் அமைந்துள்ள மாநாட்டு மண்டபம் ஆகியனவே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வவுனியா கோயில்குளம் கமநலசேவை நிலையத்தின் கீழ் சுமார் 20 மில்லியன் ரூபா செலவில் இவை அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் வவுனியா கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் விஜயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் நா.கமலதாஸன், வடபிராந்திய பிரதான பொறியிலாளர் திணேஸ்குமார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர், கமக்கார அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்து தெரிவிக்க