இலங்கை

யாழில் 12 வயது சிறுமிக்கு கத்திக்குத்து!

யாழ்ப்பாணம் – நாவற்குழி 300 வீட்டுத்திட்டப் பகுதியில் சிறுமி ஒருவர் கழுத்தில் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.
அப்பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போது உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
தகராற்றின் போது குறுக்கே சென்ற 12 வயதான துவாரகா என்ற சிறுமியே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகி உள்ளார். இவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க