சினிமா

ஏனிந்த முடிவு- துயரத்தில் ரசிர்கள்

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று இறந்துபோன துயரச்செய்தி திரையுலகத்தை மட்டுமல்ல ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

பிரபல இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான ‘Kai Po Che’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், 2016ம் ஆண்டு வெளியான பிரபல கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் தோணியாக நடித்ததன் மூலம் பெரிய அளவில் பெயர் பெற்றார்.

34 வயதாகும் சுஷாந்த் இதுவரை பி.கே, ராப்டா, வெல்கம் டு நியூயார்க் போன்ற பல படங்களில் தனது இயல்பான நடிப்பால் நடிகர்களை ஈர்த்தார்.

இந்த 2020ம் ஆண்டு இவருடைய நடிப்பில் ‘Dil Bechara’ என்ற படத்தில் நடித்து வந்தார், இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இறுதியாக அவர் நடித்த ‘Chhichhore’ என்ற படத்தில் தற்கொலைக்கு எதிர்காக பல விஷயங்களை அவர் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

11 படங்கள் மட்டுமே நடித்துள்ளார் என்ற போதும் மிக குறுகிய காலத்தில் பல நல்ல நண்பர்களை சம்பாரித்தவர் சுஷாந்த். பலருக்கும் தன்னம்பிக்கையூட்டும் படங்களில் நடித்த அவரின் இந்த தற்கொலை முடிவு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ‘ஏன் இந்த விபரீத முடிவு எடுத்தாய்..?’ என்று பல இளம் ரசிகர்கள் வருத்தத்துடன் பெருமளவிலான பதிவுகளை தெரிவித்து வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க