வெளிநாட்டு செய்திகள்

கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகுகிறார் தெரேசா மே

பிரித்தானிய பிரதமர் தெரசா மே இன்று அவரது கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து உத்தியோகபூர்வமாக விலகுகிறார்.

எனினும் கட்சியின் புதிய தலைவர் தெரிவு செய்யப்படும் வரையில் கட்சியின் பொறுப்பை ஏற்று செயற்படுவார் என குறிப்பிடப்படுகிறது.

பிரெக்ஸிட் இழுபறிக்காக தமது வருத்தத்தை தெரிவித்திருந்த பிரதமர், இரண்டு வாரங்களுக்கு முன்னர் தான் பதவி விலக உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் இன்று அவர் பதவி விலகியுள்ளார். கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு கட்சியின் சிரேஷ்ட நடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் போட்டியிடுகின்றனர்.

கருத்து தெரிவிக்க