வெளிநாட்டு செய்திகள்

டுபாயில் பேருந்து விபத்து- 17 பேர் உயிரிழப்பு

டுபாயில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.

டுபாயில் இருந்து ஓமனுக்கு விடுமுறையை கழிக்க சென்றவர்கள் மீண்டும் திரும்பிய நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தானது டுபாய் மெட்ரோ ரயில் நிலையம் அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த விளம்பர பலகைகளை தாங்கி நிற்கும் தூணின் மீது மோதியதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 10 பேர் இந்தியர்கள் ஆவர். அதில் 6 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்று துபாய் அரசு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கருத்து தெரிவிக்க