விளையாட்டு செய்திகள்

கோலிக்கு ஐ.சி.சி வழங்கிய கெளவரம்-பாரபட்சமென ரசிகர்கள் விமர்சனம்

உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை தொடங்குவதற்கு முன்பாக இந்திய அணி தலைவர் விராட் கோலியை ‘கிங்’காக சித்தரித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) புகைப்படம் ஒன்றை வெளியிட்டது.

அந்த படத்தில் கோலி, கிரீடம் சூடியபடி கையில் துடுப்பாட்ட மட்டை மற்றும் பந்துடன் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார். கோலிக்கு, ஐ.சி.சி. புகழாரம் சூட்டியுள்ள அதே வேளையில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

உலக கோப்பைக்காக 10 அணிகள் போராடும் நிலையில், இந்திய அணி தலைவர் கோலி மீது மட்டும் ஐ.சி.சி. தனிக்கவனம் செலுத்துவது பாரபட்சமானது என்று பல ரசிகர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க