கிழக்கு செய்திகள்

நீர் கட்டண பட்டியல் நிலுவை செலுத்தாதவர்களுக்கெதிராக வழக்கு

துண்டிக்கப்பட்ட நீர் இணைப்பிற்கான நிலுவையினை செலுத்தாத பாவனையாளர்களுக்கெதிராக 1974 ஆம் ஆண்டின் இலக்கம் 2ஐக் கொண்ட சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நீர் கட்டணம் செலுத்தாமையினால் அண்மையில் நீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பாவனையாளர்கள் உள்ளனர். அவர்கள் மீதும் சபையின் சட்டவிதிக்கமைய வழக்குதாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

எனவே நீர் பாவனையாளர்கள் தாம் செலுத்த வேண்டிய நிலுவைகளை எதிர் வரும் 14.06.2019ம் திகதிக்கு முன்னர் செலுத்தி அசௌகரியங்களில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு பிராந்திய முகாமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்நிலையில் மட்டக்களப்பு நீர் வழங்கல் திட்டத்தினுள் 253 பேருக்கும், இருதயபுரத்தில் 117 பேருக்கும், காத்தான்குடியில் 353 பேருக்கும், ஆரையம்பதியில் 115 பேருக்கும், களுவாஞ்சிகுடி,கல்லாறு, செங்கலடி,வவுணதீவு, ஏறாவூர், கல்லடி ஆகிய பகுதியில் முறையே 168 ,218 ,387 ,103 ,210, 89 பேருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கருத்து தெரிவிக்க