Uncategorizedவெளிநாட்டு செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 11 ஆயிரம் கிலோகிராம் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி நேபாள அரசினால் ஆரம்பிக்கப்பட்ட தூய்மைப்படுத்தும் பணி சுற்று சூழல் தினமான நேற்று முடிவடைந்துள்ளது.

இதில், வெற்று ஓட்ஸிசன் சிலிண்டர்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், மின்கலங்கள் உட்பட மொத்தம் 11 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றப்பட்டன. மேலும், 4 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கருத்து தெரிவிக்க