உலகம்

கொரோனா தொற்று ஏற்பட்டால் காய்ச்சல், இருமலுக்கு முன்னர் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம்!

நாளுக்கு நாள் உலக நாடுகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் பதிவாகி வருகிறது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 76 இலட்சத்தைக் கடந்துள்ளது. அதேவேளை கொரோனாவால் உயிரிழந்தோர் 4.24 இலட்சத்தை தாண்டியுள்ளது.

கொரோனா தொற்று நோயாளிகளுக்கு பல்வேறு வகையான அறிகுறிகள் தென்படும்.

வோஷிங்டனில் வெளியாகும் அன்னல்ஸ் ஒப் நியூரோலஜி என்னும் இதழில் வெளியாகி இருந்த ஆய்வுக் கட்டுரையில் , கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், இருமல் பிரச்சனைகள் ஏற்பட முன்பு நரம்பியல் தொடர்பான பாதிப்புகள் தோன்றக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூளை, முதுகெலும்பு, நரம்புகள், தசைகள் உட்பட முழு நரம்பு மண்டலத்தையும் இந்நோய் பாதிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க