இலங்கை

யாழில் இராணுவ அதிகாரியின் கையிலிருந்து வெடித்த மர்மபொதி!

யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸ் பிரிவு, வல்லைவெளிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த பகுதியில் இருந்த மர்ம பொதி ஒன்றே வெடித்துள்ளதாக நெல்லியடி பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
வல்லைவெளி இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் விழுத்திவிட்டுச் சென்ற பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச்சிதறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
இதில் காயமடைந்த அதிகாரி இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்து தெரிவிக்க