இலங்கை

தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுதலை! பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகம் ஒன்றில் தெரிவிப்பு.

தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை விடுவிக்க முடியாது. ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே இதனைக் கூறியுள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் ஆராய்ந்து வருவதாகவும் விடுவிக்கக்கூடிய கைதிகளை விரைந்து விடுவித்தே தீருவோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தியிருந்த வேளையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் தொடர்பிலும் பேசப்பட்டது. அந்தப் பேச்சில் பிரதமர் கேட்டுக்கொண்டமைக்கமைய சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் பெயர்ப்பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இந்த விவகாரத்தை நீதி அமைச்சு மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றின் கவனத்துக்கும் கொண்டு வர உள்ளதாகவும் தமிழ் அரசியல் கைதிகளில் பாரிய குற்றங்கள் செய்தவர்களை தவிர ஏனையோர் விரைந்து விடுவிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க