உள்நாட்டு செய்திகள்புதியவை

பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் முன்னிலை!

நாட்டில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதல்கள் குறித்து ஆராய்ந்துவரும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் பொலிஸ் உயரதிகாரிகள் நால்வர் இன்று 4ஆம் திகதி முன்னிலையாகவுள்ளனர்.

இதன்படி, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வருண ஜயசுந்தர மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாலக டி சில்வா ஆகியோர் முன்னிலையாகவுள்ளனர்.

இவ்வாறு வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் போது ஊடகங்களுக்கு செய்தி சேகரிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் ரவூப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ரவி கருணாநாயக்க, டொக்டர் ராஜித்த சேனாரத்ன, ஆசு மாரசிங்க, ஜயம்பதி விக்ரமரத்ன, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் முன்னிலையில் இடம்பெறுகின்றது.

குறித்த தெரிவுக்குழு முன்னிலையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ஷாந்த கோட்டேகொட மற்றும் தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைமை அதிகாரி சிசிர மென்டிஸ் ஆகியோர் கடந்த 29ஆம் திகதி வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.

கருத்து தெரிவிக்க