உள்நாட்டு செய்திகள்

புத்தரை பௌத்த பிக்குகள் அவமதித்து விட்டார்கள்- அமைச்சர் மனோகணேசன்

கௌதம புத்தரின் பெயரால், பேரினவாதம் பேசி இந்நாட்டு முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு தள்ளியுள்ள பௌத்த துறவிகள், புத்தனை அவமானப்படுத்தி விட்டார்கள். இனியும் இந்நாடு ஒரு பௌத்த நாடு என்பதை உலகம் ஏற்றுக்கொள்ளாது என அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, முஸ்லிம் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக இராஜினாமா செய்ய போகும் அறிவிப்பை நானும், அமைச்சர் மங்கள சமரவீரவும் ஏற்றுக்கொள்ள மறுத்தோம்.

இது பிழையான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என நாம் கூறினோம். எனினும் முஸ்லிம் அமைச்சர்கள் தம் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்கள்.

இன்று முஸ்லிம் அமைச்சர்களை பதவி விலக கூறி உபவாசம் இருக்கும் பௌத்த துறவிகள், நாளை மீண்டும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், தமிழ்-சிங்கள கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், செயற்பட கூடும் இந்த பேரினவாதிகளுக்கு ஆதரவு வழங்கினால், இந்நாட்டின் அனைத்து தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் வீதிக்கு வர வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க