உள்நாட்டு செய்திகள்

முஸ்லீம் அமைச்சர்கள் பதவி விலகல்- எம்.ஏ சுமந்திரன் வருத்தம்

முஸ்லீம் அமைச்சர்கள் இனவாதத்துக்கு இரையானது வருத்தமளிக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் அவர்
இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவில் ,நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொருவர் என இனவாதத்துக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. முஸ்லிம் மக்களோடு நாம் தொடர்ந்து தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் இதனையே செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் என மேலும் கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க