வெளிநாட்டு செய்திகள்

ஒக்டோபரில் பிரித்தானியா வெளியேறும்-பொரிஸ் ஜோன்சன்

ஒக்டோபரில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேறும் என பிரித்தானிய பிரதமர் பதவிக்கு போட்டியிடும் போட்டியாளரான பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே பிரெக்ஸிட் இழுபறியால் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் அப்பதவிக்கு பல முக்கியஸ்தர்கள் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் போட்டியாளர்களில் ஒருவரான முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் பொரிஸ் ஜோன்சன் தற்போது பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

பிரதமராகும் பட்சத்தில் பிரெக்ஸிட் ஒப்பந்தம் இன்றியோ அல்லது ஒப்பந்தத்துடனோ ஒக்டோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா நிச்சயம் வெளியேறும் என தமது பிரசாரத்தில் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், வரிகளைக் குறைத்தல்,கல்வி,உட்கட்டமைப்பு மற்றும் சுகாதாரத்துறை ஆகியவற்றில் அதிக முதலீடுகளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் உறுதியளித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க