ஜனாதிபதியின் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டத்தின் தொடக்க நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரனால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ‘சக்தி’ எல்.ஈ.டி மின்குமிழ் விநியோக செயற்திட்ட அங்குரர்ப்பண நிகழ்வு முல்லைத்தீவு மாவட்ட மின்பாவனையாளர் சேவை நிலையத்தில் மின்சாரசபையின் வடபிராந்திய பொது முகாமையாளர் டி.கே.பி.யு.குணத்திலக தலைமையில் நடைபெற்றுள்ளது.
ஜனாதிபதியின் மின்சக்தியை சேமித்து பாதுகாக்கும் வகையில் மக்களை ஊக்குவித்தல் திட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிககுறைந்த மின் பாவனையாளர்கள் 8ஆயிரம் பேர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான மின்குமிழ் வழங்கும் அங்குரார்ப்பண நிகழ்வும் நடைபெற்றுள்ளது.
கருத்து தெரிவிக்க