வடக்கு செய்திகள்

சமுர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு 8 ஆம் திகதி வழங்கப்படும்-முல்லைத்தீவு சமுர்த்தி திட்ட பணிப்பாளர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்டகாலமாக சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படாமல் உள்ள மக்களுக்கு எதிர்வரும் 08 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட சமுர்த்தி திட்ட பணிப்பாளர் க.ஜெயபவானி தெரிவித்துள்ளார்.

‘முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்ட நிகழ்விலேயே இக்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்ற பிரதேசத்தில் 3ஆயிரத்தி 697 குடும்பங்களுக்கம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 6ஆயிரத்தி 11 குடும்பங்களுக்கும்,மாந்தை கிழக்கு பிரதேசத்தில் அறுநூற்றி 57 குடும்பங்களுக்கும்,துணுக்காய் பிரதேசத்தில் 642 குடும்பங்களுக்கும்,ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் ஆயிரத்து 758 குடும்பங்களுக்கும் வெலிஓயா பிரதேசத்தில் 878 குடும்பங்களும் என முல்லைத்தீவு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 643 குடும்பங்களுக்கான சமுர்த்தி திட்ட அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க