உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

SLFP – SLPP கூட்டணியில் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி – பிரதமராக மஹிந்த – தயாரிசிறி கருத்து

சிறி லங்கா சுதந்திரக் கட்சியும் சிறி லங்கா பொதுஜன முன்னணியும் கூட்டணி அமைக்குமானால் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க வேண்டுமென சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அடுத்துவரும் பொதுத் தேர்தலின் பின்னர் பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வழங்க முடியுமெனவும் அப்படியில்லாமல் ஜனாதிபதி பதவி, பிரதமர் பதவி மற்றும் அமைச்சுப் பொறுப்புக்கள் அனைத்தும் ஒரே கட்சிக்கே வழங்க முடியாது எனவும் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பான கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க