சினிமா

இசைஞானி கொடுத்த பிறந்தநாள் பரிசு

இசைஞானி இளையராஜாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் ஈவிபி பிலிம் சிட்டியில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

திரை இசை கலைஞர்களின் சங்கத்திற்கு கட்டிடம் கட்டுவதற்காக நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் நீண்ட நாட்களுக்கு பிறகு பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியமும் இளையராஜாவும் ஒரே மேடையில் ரசிகர்களை பாடி பேசி மகிழ்வித்தனர்.

விழாவில் இளையராஜா பேசும்போது இசைக் கலைஞர்களின் சங்கத்திற்கான கட்டடத்தை என் சொந்த செலவில் கட்டி தருவதாக அறிவித்தார். இதனால் திரை இசை கலைஞர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம்.

கருத்து தெரிவிக்க