இலங்கை

தேர்தல் ஒத்திகை தொடர்பில் உண்மையை வெளியிட்ட தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரிய!

பொதுத் தேர்தலை முன்னிட்டு அம்பலாங்கொடையில் நடத்தப்பட்ட தேர்தல் ஒத்திகையில் தோல்வியே அதிகம் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். தேர்தல்கள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் கூறினார்.
மேலும் கருத்துத் தெரிவித்த அவர் , பொதுத் தேர்தலுக்கான சுகாதார வழிகாட்டல் அறிக்கையொன்று சுகாதார பணிப்பாளரினால் எமக்கு வழங்கப்பட்டிருந்தாகவும் அந்த வழிகாட்டலுக்கு அமையவே பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகையை அம்பலாங்கொடையில் நடத்தியதாகவும் தெரிவித்திருந்தார்.
எனினும் அதில் பல விடயங்கள் தோல்வியில் முடிந்துள்ளதாகவும் முக்கியமாக கைகளை கழுவும் விடயத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.
ஏனெனில் கைகளை கழுவிய பின்னர் வாக்குச் சீட்டில் கைவைத்தால் சீட்டு நனைகின்றது. ‘கிருமிநாசினி’  கொண்டு கிருமி தொற்றை நீக்கும் முறைமையும் கடினமாக உள்ளதாகவும் கையில் உள்ள ஈரத்தன்மை வாக்குச் சீட்டை ஈரமாக்குகின்றது. எனவே வேறு முறைமையை ஆராய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மீண்டும் தேர்தல் ஒத்திகைகள்  நடத்தப்படவுள்ளதாகவும் எதிர்வரும் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் நாடு பூராகவும் இத்தேர்தல் ஒத்திகை இடம்பெறவுள்ளதாவும் அதனை அவதானித்து அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற தீர்மானத்தை எடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கருத்து தெரிவிக்க