உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இந்தியாவின் ‘சங்கல்ப்’ கப்பல் காலி துறைமுகத்தில்

இந்திய கரையோர பாதுகாப்பு பிரிவுக்குச் சொந்தமான ‘சங்கல்ப்’ கப்பல் விநியோக நடவடிக்கைகளுக்காக காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கப்பல் காலி துறைமுகத்தை அடைந்ததனால் ‘சங்கல்ப்’ கப்பலின் கட்டளைத் தளபதி கெப்டன் பிரஷாந்த் சர்மா தெற்கு கப்பற்படை தலைமையகத்தின் கட்டளைத் தளபதி ரியல் அட்மிரல் கஸ்ஸப கோட்டாபய போலை சந்தித்தார்.
அதன்போது இருதரப்பினருக்கும் இடையில் பல்வேறு விடயங்கள் குறித்து பேச்சுவார்ததைகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் இருதரப்பினருக்கும் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க