வெளிநாட்டு செய்திகள்

பிரித்தானிய சிறுமி ஸ்பெய்னில் பாலியல் துஷ்பிரயோகம் – விசாரணைகள் தீவிரம்

பிரித்தானிய சிறுமி ஒருவர் ஸ்பெய்னில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த சபவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக ஸ்பெய்ன் பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ‘ ஸ்பெய்னின் மயோர்காவிற்கு (Majorca) 15 வயது சிறுமியை ஒருவர் சுற்றுலா சென்றுள்ளார். அந்தச் சிறுமி தங்கியிருந்த நட்சத்திர விடுதியின் அறைக்குள் அத்துமீறி நுழைந்த ஒருவர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.இதையடுத்து, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.’

குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க