வெளிநாட்டு செய்திகள்

ஐ.நா.-வின் உதவி பொது செயலாளராக இந்திய பெண் நியமனம்

ஐக்கிய நாடுகள் சபையின் உதவி பொது செயலாளராக இந்தியாவை சேர்ந்த அனிதா பாட்டியா நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆற்றல் மேலாண்மை, நிலைத்தன்மை, கூட்டு ஆகியவற்றுக்கான உதவி பொதுச்செயலாளராக அவர் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் குட்டரஸ் வெளியிட்டுள்ள நிலையில், பலரும் இதற்கு தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

கருத்து தெரிவிக்க