உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

இரண்டாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான அவசரம் தனக்கு இல்லை! – ஜனாதிபதி மைதிரிபால

இந்த வருடத்தின் இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது குறித்து தாம் இதுவரை தீர்மானிக்கவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு வைபவத்தில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால, புதுடில்லியில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
மீண்டுமொருமுறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக இல்லையா என்ற தீர்மானத்தை எடுப்பதற்கு எவ்வித அவசர தேவையும் தனக்கு இல்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதுடில்லியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பின் பின்னர் இந்த ஊடகவியலாளர் மாநாடு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க