உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

நவம்பர் 15 இல் ஜனாதிபதித் தேர்தல்!

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் மாதம் 15 அல்லது டிசம்பர் 07 ஆம் திகதி கட்டாயம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இன்று அறிவித்தார்.

சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அவர் அறிவித்தார்.

“ நாட்டில் குண்டுவெடித்தது என்பதை காரணம்காட்டி ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது. அதற்கு தேர்தல் ஆணைக்குழு இடமளிக்காது.

1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது இதைவிடவும் பயங்கரமான சூழ்நிலை நிலவியது. எனினும், தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை.

ஜனாதிபதித் தேர்தலானது எதிர்வரும் நவம்பர் 9 ஆம் திகதிக்கு பிறகு, டிசம்பர் 9 ஆம் திகதிக்குள் முன்னர் கட்டாயம் நடத்தப்படவேண்டும்.

முன்கூட்டியே நடத்துவதாக இருந்தால் நவம்பர் 15 ஆம் திகதியும், இறுதியில் நடத்துவதாக இருந்தால் டிசம்பர் 7 ஆம் திகதியும் நடத்த முடியும். இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் ஆகியோருக்கு அறிவித்துவிட்டோம். எனவே, எவரும் தேர்தலை ஒத்திவைக்கமுடியாது.’’ என்றும் அவர் கூறினார்.

கருத்து தெரிவிக்க