உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

முத்துஐயன்கட்டு பகுதியில் விபத்து ஏழு பேர் காயம்

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்  முத்துஐயன்கட்டு பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர்

மாலை நேர கல்வி நிலையத்தில் கல்வி கற்கின்ற மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கர வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதி குறித்த விபத்து இடம் பெற்றிருக்கின்றது

முத்துஐயன்கட்டு புனிதபூமிக்கு திரும்புகின்ற சந்திப் பகுதியில் இடம் பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 7 பேரும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்

விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்து தெரிவிக்க