உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

அசாத் ஷாலி அச்சுறுத்தல்:பொது ஜன பெரமுன வெளிநடப்பு

மேல்மாகாண ஆளுநர் அஸாத் ஷாலிக்கு தமது எதிர்ப்பை காட்டும் வகையி;ல் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் இன்று கூட்டம் ஒன்றில் இருந்து வெளிநடப்புச் செய்தனர்.

களுத்துறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் நடத்தப்பட்டது.
இதில் ஆளுநர்; அசாத் ஷாலியும் பங்கேற்றார்.

இதன்போது அடிப்படைவாதியான அசாத் சாலி இந்தக்கூட்டத்தில் பங்கேற்பதால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம வெளிநடப்பு செய்யவில்லை.

இதற்கிடையில் அஸாத் சாலிக்கு எதிர்ப்பு தெரிவித்து, களுத்துறை பிரதேச செயலகத்துக்கு முன்னால் இன்று பிக்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்றும் நடத்தப்பட்டது.

கருத்து தெரிவிக்க