உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

ஹட்டன் பேருந்து நிலையப் பாதை சீர்செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை

ஹட்டன் நகரில் உள்ள பிரதான பேருந்து நிலைய பாதையானது நீண்ட காலமாக சீர்செய்யப்படாமல் உள்ளது

இந்த பகுதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன சாரதிகளும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

மழை காலங்களில் இந்த வீதிகளிலுள்ள குழிகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது.

இதனால் பயணிகளுக்கு பல்வேறு அசௌகரியங்கள் ஏற்படுகின்றன.

இது குறித்து ஹட்டன் நகரசபைக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர் .

கருத்து தெரிவிக்க