உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்வடக்கு செய்திகள்

கிளிநொச்சி வாள் வீச்சுத்தாக்குதல் தொடர்பில் இருவர் கைது. கொடுக்கல் வாங்கலே காரணம்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் இன்று பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் இருந்து சில கூரிய ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கிளிநொச்சி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனம் ஒன்றிலும் உந்துருளி ஒன்றிலும் வந்த சுமார் 15பேர் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தினர்.

இதன்போது 10 பேர் காயமடைந்தனர்.

அவர்கள், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒரு கர்ப்பிணி தாய் உட்பட்ட 05 பெண்களும் 05 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

வீட்டில் இருந்து உந்துருளி ஒன்று தீக்கிரையாக்கப்பட்டு ஒன்று சேதமாக்கப்பட்டுள்ளது.


இது தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக இடம்பெற்ற தாக்குதல் என்று ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பணக்கொடுக்கல் வாங்கல் இதற்கு பின்னணியாக இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க