இலங்கை

ஜனாதிபதி செயலணியை நிறுவும் சிறப்பு வர்த்தமானியை ரத்து செய்ய வேண்டும்.

பாதுகாப்புப் படையினர் ஆதிக்கம் செலுத்தும வகையில் ஜனாதிபதியினால் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணிக்கான பிரகடனத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று ஐஎப்ஜே என்ற சர்வதேச அறங்கூறுனர் சபை கோரியுள்ளது. இது இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாவினை ஆயுதமாக கொண்டு  தன்னுடைய அதிகாரங்களை விரிவுபடுத்தவும் ஜனாதிபதி செயலணி முனைவதாகவும் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச அறங்கூறுநர் சபையின் பிராந்திய இயக்குனர் ஃபிரடெரிக் ராவ்ஸ்கி சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இலங்கை அரசு இச்செயலணியினை பேச்சு சுதந்திரம் மற்றும் அரசியல் விமர்சகர்களை அடக்குவதற்கு மற்றொரு கருவியாக பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகம் இல்லை என்று சர்வதேச அறங்கூறுனர் சபை தெரிவித்துள்ளது. எனவே ஜனாதிபதி செயலணியை நிறுவும் சிறப்பு வர்த்தமானியை ரத்துச்செய்யவேண்டும் என்று சர்வதேச அறங்கூறுனர் சபை கோரியுள்ளது.

அத்துடன் போர்க்குற்றவாளிகள் உட்பட படைத்தரப்பின் பலரை உள்ளடக்கியுள்ள இந்த செயலணிக்கு பரந்த அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் இராணுவ, உளவுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த செயலணிக்கு தலைமை தாங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை நீதித்துறை அல்லது நாடாளுமன்ற மேற்பார்வை பற்றி எந்த கரிசனையில் இல்லாமல், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு ஏற்ப இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளமை கவலைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க