உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலிய கவரவல தமிழ் வித்தியாலயத்தில் ஆர்ப்பாட்டம்

மஸ்கெலிய, கவரவில தமிழ் வித்தியாலய ஆசிரியர்களும் பெற்றோரும் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்

பாடசாலையின் இரண்டு ஆசிரியர்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக் கருதி மேற்கொள்ளப்பட்ட ஒருவழிப்பாதையை வெளியார் சிலர் பயன்படுத்தியமை தொடர்பில் பிரச்சனை தோன்றியிருந்தது.

இந்தநிலையிலேயே குறித்த இரண்டு ஆசிரியர்களும் தாக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்திய ஐந்துபேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதனை ஆட்சேபித்தே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க