உள்நாட்டு செய்திகள்மலையகச் செய்திகள்வடக்கு செய்திகள்

வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி மா காவல்துறை அதிபர் – ஆளுநர் சந்திப்பு

வடமாகாணத்தின் புதிய சிரேஷ்ட பிரதி மா காவல்துறை அதிபர் ரவி விஜயகுணவர்தன .ஆளுநர்  சுரேன் ராகவனை  இன்று (28) காலை ஆளுநர் செயலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலைமைகள்   தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

வடமாகாணத்தில் இடம்பெறும்,  சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் ஆளுநர்  இதன்போது கேட்டுக்கொண்டார்.

மேலும் சட்டவிரோத மண்அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும்

வடமாகாணத்தில் முக்கியமாக மக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு மக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாதவாறு  காவல்துறை ஏனைய பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து ஆரோக்கியமான செயற்திட்டத்தை முன்னெடுக்கவேண்டும் என்றும் ஆளுநர்  புதிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபரிடம் கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க