உள்நாட்டு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

6 தாய்மார்கள் வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக முறைப்பாடு! – இன்றும் சில தாய்மார்கள் முறைப்பாடு

கருத்தடை சத்திரசிகிச்சை செய்ததாகக் கூறப்படும் வைத்தியர் சேகு ஷிஹாப்தீன் முஹம்மட் ஷாஃபிக்கு எதிராக ஆறு தாய்மார்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இவர்கள் நேற்றைய தினம் இந்த முறைப்பாட்டை குருணாகலை வைத்தியசாலையில் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த முறைப்பாட்டை செய்த தாய்மார்கள், தாங்கள் முதல் குழந்தையை பெற்றெடுத்ததாகவும் தனக்கு இரண்டாது குழந்தையொன்றை பெற்றெடுக்க முயற்சி செய்த போதிலும் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போயுள்ளதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதற்காக தாங்கள் லட்சக்கணக்கில் செலவு செய்து பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சைபெற்ற போதிலும் மற்றுமொரு குழந்தையை பெற்றெடுப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளதாக தாங்கள் அந்த முறைப்பாட்டில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, கருத்தடை சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் ஷாஃபிக்கு எதிராக வாரியபொல, குருணாகலை, நிக்கவரெட்டிய, கலேவல உள்ளிட்ட பல பிரதேசங்களில் இருந்தும் தாய்மார்கள் இன்றைய தினம் முறைப்பாடு செய்யவுள்ளதாக குருணாகல் வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க