உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மோடியின் பதவியேற்பு நிகழ்வில் மைத்ரி. இம்ரான்கான் அழைக்கப்படுவாரா?

இந்திய பிரதமராக நரேந்திரமோடி மீண்டும் பதவியேற்கவுள்ள நிகழ்வில் இலங்கையின் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பங்கேற்கவுள்ளார்.

இந்த நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி புதுடில்லியில் நடைபெறவுள்ளது.

நேற்று இலங்கையின் ஜனாதிபதியும் நரேந்திரமோடியும் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.

இதன்போது நரேந்திர மோடி அழைப்பு விடுத்தாரா? என்பது தெரியவரவில்லை.

எனினும் நிகழ்வில் அயல்நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கானுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்பது குறித்த தகவல்கள் இல்லை.

கருத்து தெரிவிக்க