உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வவுனியாவில் மீனவர்களுக்கான ஒய்வு மண்டபம் திறப்பு

வவுனியா கல்மடுவில் 40 இலட்சம் ரூபா செலவில் மீனவர்களிற்கான ஒய்வு மண்டபம் கடற்றொழில் நீரியல் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.என்.பி.எம். விக்கிரமசிங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

கல்மடு விடிவெள்ளி மீனவர் சங்கத்தலைவர் பவானந்தராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் பிராந்திய நீரியல் விரிவாக்கல் அலுவலகத்தின் மாவட்ட  நீர் உயிரின செய்கை விரிவாக்கல் உத்தியோகத்தர் யோகநாதன் நிசாந்தன், வவுனியா உதவி பிரதேச செயலாளர் திருமதி பிரியதர்சினி சஜந்தன், கல்மடு கிராம சேவையாளர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


வவுனியா கல்மடு குளத்தின் கீழ் மீன்பிடியில் ஈடுபட்டு வரும் மீனவர்களிற்காக வாவி உடனான கிராம எழுச்சித்திட்டத்தின் கீழ்;  இந்த மீனவர் ஒய்வு மண்டபம் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க