உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

ஓமந்தை மத்தியகல்லூரியின் மாணவர் விடுதி  திறப்பு

வவுனியா  ஓமந்தை மத்தியகல்லூரியின் மாணவர் விடுதி  இன்று திறந்து வைக்கப்படவுள்ளது.
இறுதி யுத்தத்தின்போது சரண்டைந்த விடுதலைப்புலிகளை தங்க வைக்கும் நிலையமாக செயற்பட்ட இப் பாடசாலையின் விடுதிப்பகுதி அதிக பண செலவில் அதிபரின் முயற்சியினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
9.5 மில்லியன் நிதியொதுக்கீட்டில் வட மாகாண பிரதம செயலாளரின் நிதி ஒதுக்கீட்டில் புனரமைக்கப்படு திறந்து வைக்கப்படவுள்ளது.
இந் நிலையில் விடுதிக்கான  நிர்வாகம்   இப்பாடசாலையைசூழவுள்ள  பொது அமைப்புக்களின் தலைவர்கள்  SDC குழு உறுப்பினர்கள் ஆசிரியர்கள் இணைந்த குழுவாகவும் பாடசாலை அதிபர் போசகராகவும் உள்ளடக்கி அமைக்கப்பட இருப்பதால்  பொதுஅமைப்பின் தலைவர்கள் உங்கள் விருப்பத்தையும் வரவையும்  0779771054 இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு தெரியப்படுத்துடன் 27.05.2019 காலை 11.00 மணிக்கு பாடசாலைக்கு வரவுதரவும்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க