உள்நாட்டு செய்திகள்முக்கிய செய்திகள்

சஹ்ரான் குழுவின் 41 வங்கிக் கணக்குகள் முடக்கம்!

21/4  தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 41 சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன என்று காவல்துறை ஊடகப்பேச்சாளர் ருவான் குணசேகர  தெரிவித்தார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

” குற்றப் புலனாய்வுப் பிரிவு,  பயங்கரவாத தடுப்பு பிரிவு ஆகியவற்றால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவரும் சந்தேகநபர்களின் வங்கிக் கணக்குகளே இவை. சுமார் 134 மில்லியன் ரூபா  இவற்றில் வைப்பிலிடப்பட்டுள்ளது.

அத்துடன், 14 மில்லியன் ரூபா  பெறுமதியான சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஏனையவை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட்டுவருகின்றன.” என்றும் கூறினார்.

அதேவேளை, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பை வைத்திருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில் இன்று சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. எனினும், இது தொடர்பான தகவல்கள் இன்னும் உத்தியோகப்பூர்வமாக வெளிவரவில்லை.

கருத்து தெரிவிக்க