உள்நாட்டு செய்திகள்கிழக்கு செய்திகள்

மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு – படுகொலையா? பலகோணங்களில் விசாரணை

மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் பாலத்துக்கு கீழிருந்து இன்று காலை ஆணொருவரின் சடலம்  மீட்கப்பட்டுள்ளது.

வெல்லாவெளி காக்காச்சிவட்டை பிரதேசத்தைச் சேர்ந்த  கே.கரிகரன் (38-வயது) எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தலையில் பலத்த காயங்கள் காணப்படுவதால், படுகொலையின் பின்னர் அவரின் உடலை  பாலத்திற்கு கீழ் வீசியிருக்கலாமென காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் குறித்து வெல்லாவெளி காவல்துறையினர் பலகோணங்களில் விசாரகைளை முன்னெடுத்துவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க