உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவை

சட்டவிரோத மது விற்பனையாளர்களின் தாக்குதலிலேயே காவல்துறை அலுவலர் பலி

மாத்தறை அக்குரஸ்ஸையில் சட்டவிரோத மதுபான விற்பனையகம்; ஒன்றை சோதனையிட்டபோதே காவல்துறை அலுவலர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அக்குரஸ்ஸ உருமுத்த என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சட்டவிரோத மது உற்பத்தியகத்தை காவல்துறையினர் சோதனையிட முயன்றபோது அங்கிருந்தவர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

இதன்பின்னர் அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் காவல்துறைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்து தெரிவிக்க