உள்நாட்டு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

மஸ்கெலியவில் பேருந்து சேவையின்மையால் மாணவர்கள் பாதிப்பு

மஸ்கெலிய நகரிலிருந்து சாமிமலை, காட்மோர் போன்ற பிரதேசங்களுக்கு பாடசாலைப் பேரூந்து சேவை சீராக இல்லை

தினமும் காலை வேளையிலும் மதிய வேளையிலும் முறையான பேருந்து சேவை இன்மையால் பாடசாலை மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

சாமிலை, காட்மோர் போன்ற பிரதேசங்களில் இருந்து சுமார் 650 க்கும் மேற்பட்ட மாணவர்கள் புளூம்பில்ட் த.ம.வி, மஸ்கெலிய சென் ஜோசப் கல்லூரி, மஸ்கெலிய முஸ்லிம் த.வி ,கவரவில த.ம.வி போன்ற பாடசாலைகளுக்கு கல்வி பயில சென்று வருகின்றனர்.

கடந்த காலங்களில் காலை 6 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் சாமிமலை காட்மோர் போன்ற பிரதேசங்களில் இருந்து மஸ்கெலியவிற்கு மூன்று பேரூந்துகள்; சேவையில் ஈடுபட்டன.

பி.ப 2 மணி தொடக்கம் 3 மணி வரை மஸ்கெலியவிலிருந்து சாமிமலை, காட்மோர் போன்ற பகுதிகளுக்கும் இந்தப் பேரூந்து சேவைகள் இடம்பெற்றன.

எனினும் தற்போது அந்தச் சேவைகள் இடைநிறுத்தபட்டதற்கான காரணம் தெரியவில்லை.

கருத்து தெரிவிக்க