உள்நாட்டு செய்திகள்புதியவைவடக்கு செய்திகள்

வடமாகாண ஆளுநர்- பிரதேச சபை உறுப்பினர்கள் சந்திப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளினதும் உறுப்பினர்களுக்கும் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று முல்லைத்தீவு கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

யுத்தத்திற்கு முகம்கொடுத்த மாவட்டமான முல்லைத்தீவு மாவட்டத்தின் மக்களுடைய உட்கட்டமைப்பு வசதிகளில் காணப்படும் குறைபாடுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவது தொடர்பிலும் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

மக்கள் பிரதிநிதிகளாக மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேச சபை உறுப்பினர்கள் தமது மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஒற்றுமையாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென்று ஆளுநர் பிரதேச சபை உறுப்பினர்களிடம் இந்த சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொண்டார்.

கருத்து தெரிவிக்க