அழகு / ஆரோக்கியம்

தாய்ப்பால் கொடுத்தால் இதயம் பலம் பெறும்

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் இதயம் பலம் பெறுவதாக, பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு இதயக் கோளாறுகள் எதுவும் ஏற்படாது என்பதும் தெரியவந்துள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, அவர்களது பிரசவத்துக்குப் பிறகு மன அழுத்தங்களைக் குறைப்பதாகவும், புற்றுநோய் உண்டாவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தாது என்றும் ஏற்கெனவே நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டது.

இதனால் உடல் எடை கட்டுப்பாட்டில் வைக்கப்படும் என்றும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையை சுத்திகரிக்க உதவும் என்றும் அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவித்திருந்தன.

 

 

கருத்து தெரிவிக்க