விளையாட்டு செய்திகள்

தேசிய விளையாட்டு போட்டி அநுராதபுரத்தில்

5 ஆவது தேசிய பொது விளையாட்டு போட்டியில் மரதன், சைக்கிள் மற்றும் நடை போட்டிகள் அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஆண்கள் மற்றும் மகளிர் சைக்கிளோட்டப் போட்டி எதிர்வரும் 23ஆம் 24ஆம் திகதிகளில் அநுராதபுரம் வளிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இடம்பெறும்.

நடைப் போட்டி 25ஆம் திகதி காலை ஆறு மணிக்கு விமான நிலைய பாதையின் ஏழாவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் ஆரம்பமாகும்.

ஆண்கள் மற்றும் மகளிருக்கான மரதன் ஓட்டப்போட்டி 26ஆம் திகதி அதிகாலை 5.30 இற்கு வளிசிங்ஹ ஹரிஸ்சந்திர விளையாட்டு மைதானத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகும்.

விளையாட்டு அலுவல்கள் அமைச்சும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இந்த போட்டியை ஒழங்கு செய்துள்ளன.

கருத்து தெரிவிக்க